×

பத்தியால்பேட்டை அருகில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: சாக்கடை போல் தேங்கியதால் நோய் தொற்று பரவும் அபாயம்

 

திருவள்ளூர், மே 5: பத்தியால்பேட்டை அருகில் உள்ள காமாட்சி அவென்யூவில், கடந்த 8 மாதங்களுக்கு மேலாக குடிநீர் குழாய் உடைந்து குடிதண்ணீர் வீணாக வழிந்தோடிக் கொண்டு தற்போது, சாக்கடைபோல் காட்சி அளித்து வருகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சேலை ஊராட்சியிலிருந்து, காக்களூர் ஊராட்சிக்கு செல்லும் குடிதண்ணீர் குழாய் என்பதால் திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் வழக்கறிஞர் எம்.சுரேஷ் குமார் புகார் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து மறுநாளே சரிசெய்து விடுவதாக உறுதி அளித்துவிட்டு மறுநாள் மண்ணை மட்டும் வாரி போட்டுவிட்டு சரிசெய்யாமல் சென்றுவிட்டனர். அதே நிலையில் தான் தற்போது வரை குடி தண்ணீர் சாலையில் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. வீட்டின் வாசலிலேயே தேங்கி நிற்கும் கழிவு நீரை சரிசெய்யாமல் மேடு போல் மண்ணை வாரிபோட்டதால் வீட்டில் உள்ளவர்கள் வாகனத்தை வெளியே எடுத்து செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதனையடுத்து மீண்டும் திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு சென்று கேட்டபோது எங்கள் ஊராட்சி எல்லையில் இந்த குடிநீர் குழாய் இல்லை, நகராட்சி எல்லைக்குட்பட்டது என்று தட்டிக்கழித்தனர். இந்நிலையில் திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் கேட்டதற்கு அது காக்களூர் ஊராட்சி குழாய். ஆகையால் நாங்கள் சரிசெய்ய முடியாது என்று தெரிவித்துவிட்டனர்.

ஆனால் ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் சாலையில் வழிந்தோடும் குடிதண்ணீரை சரி செய்யாமல் எங்களுக்கு சம்பந்தமில்லை 2 நிர்வாகங்களும் தொடர்ந்து அலைகழித்து வருகின்றன. பத்தியால்பேட்டை அருகில் உள்ள காமாட்சி அவென்யூவில் கடந்த 8 மாதங்களுக்கு மேலாக குடிநீர் குழாய் உடைந்து குடிதண்ணீர் வீணாக வழிந்தோடிக் கொண்டிருப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் சார்பில் வழக்கறிஞர் எம்.சுரேஷ்குமார் கொடுத்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

The post பத்தியால்பேட்டை அருகில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்: சாக்கடை போல் தேங்கியதால் நோய் தொற்று பரவும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Bhattialpet ,Thiruvallur ,Kamakshi Avenue ,Dinakaran ,
× RELATED டிஜெஎஸ் பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளியில்...